தமிழ் அறிஞர், எழுத்தாளர்,
வழக்கறிஞர், மேடைப்பேச்சாளர் என பன்முகம் கொண்ட
பாவலர். தமிழில்
சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும்
பெயர் பெற்றவர்.
இனிய உரைச்
செய்யுள் எனக்
குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை
வாய்ந்தது எனப்
பலரும் பாராட்டியுள்ளனர்.
உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே
உரிய எதுகை,
மோனை என்பவற்றையும்
உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.
பிறப்பு:
சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள
திருநெல்வேலிக்கு அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த
இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896 ஆம் ஆண்டு
மார்ச்சுத் திங்கள் 2 ஆம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை
- சொர்ணம்மாள் தம்பதியினருக்குப் பதினோராவது
பிள்ளையாகப் பிறந்து வளர்ந்தார்.
கார்காத்த வேளாளர் குலத்தில்
சேது பிறந்தார்.
சேதுக்கடலாடி இராமேசுவரத்திலுள்ள இறைவனைப்
பூசித்ததனால் பிறந்த தம் மகனுக்கு சேது
என்று பெயர்
சூட்டினர். இரா. பி. சேதுப்பிள்ளையின் முன்னெழுத்துகளாக அமைந்த 'இரா' என்பது
இராசவல்லிபுரத்தையும் 'பி' என்பது
'பிறவிப்பெருமான்பிள்ளை' அவர்களையும் குறிப்பன.
கல்வி :
ஐந்தாண்டு நிரம்பிய சேது
உள்ளூர்த் திண்ணைப்
பள்ளியில் சேர்ந்து,
தமிழ் நீதி
நூல்களைக் கற்றார்.
இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல
தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி,
நீதிநெறி விளக்கம்,
தேவாரம், திருவாசகம்
போன்ற நூல்களைக்
கற்றார். பின்னர்
தனது தொடக்கக்
கல்வியைப் பாளையங்
கோட்டையில் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும்,
இடைநிலை வகுப்பின்
(இண்டர் மீடியட்)
இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை
வகுப்பின் இரண்டாண்டுகளைச்
சென்னைப் பச்சையப்பன்
கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப்
பள்ளியில் தமிழாசிரியராக
விளங்கிய சுப்பிரமணியம்,
இந்துக் கல்லூரித்
தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுவிற்கு தமிழார்வத்தை
வளர்த்தவர்கள்.
தாம் படித்த பச்சையப்பன்
கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார்.
பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப்
பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் மாணவராகச்
சேர்ந்து படித்தார்.
சட்டப்படிப்பை முடித்து நெல்லை திரும்பிய சேது,
நெல்லையப்ப பிள்ளையின் மகள் ஆழ்வார்ஜானகியை மணந்தார்.
பணிகள்:
சேதுப்பிள்ளை 1923
ஆம் ஆண்டில்
திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு
பணியாற்றத் தொடங்கினார். நெல்லையில் வழக்குரைஞர் தொழிலை
மேற்கொண்ட சேதுப்பிள்ளை
,நகர்மன்ற உறுப்பினராகவும்,
நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பணியின் போது இவர் நெல்லை நகரில்
தெருக்களின் பெயர்கள் தவறாக வழங்கி வந்ததை
மாற்றி அத்தெருக்களின்
உண்மையான பெயர்கள்
நிலை பெறுமாறு
செய்தார்.
வழக்குரைஞராக இருப்பினும் தமிழ்
மொழியின் மீது
மிகுந்த பற்றுக்
கொண்டிருந்தார். இவரின் செந்தமிழ்த் திறம் அறிந்த
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இவரைத் தமிழ்
அறிஞராக ஏற்றுக்
கொண்டு தமிழ்த்
துறையில் தமிழ்ப்
பேரறிஞர் பதவியை
அளித்தது. சேதுப்பிள்ளை
தமிழ்த் துறையில்
விரிவுரையாளராகச் சேர்ந்து விபுலானந்தர் சோமசுந்தர பாரதியார்
ஆகிய இருபெரும்
புலவர்களின் தலைமையில் தொடர்ந்து ஆறாண்டுகள் பணிபுரிந்தார்.
தம் மிடுக்கான
செந்தமிழ்ப் பேச்சால் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தார்.
மொழி நூலை
இளங்கலை வகுப்பு
மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே கற்பித்துத்
தமிழுக்கு இணையான
தம் ஆங்கிலப்
புலமையையும் வெளிப்படுத்தினார்.
1936-இல் சென்னைப் பல்கலைக்
கழகம் சேதுப்பிள்ளையைத்
தமிழ்ப் பேராசிரியராக
அமர்த்தியத்தியதுது. 25 ஆண்டுக் காலம்
சென்னைப் பல்கலைக்
கழகத்தின் தமிழ்த்துறைப்
பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும்
பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச்
சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில்
ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை
பணியாற்றி வந்தார்.
வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப்பணி
இனிது நிறைவேற
சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப்பின் இவர் தலைமைப் பதவியை
ஏற்றார். அப்போது
பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய
கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார்.
ஆராய்ச்சி மாணவர்களுக்கு
வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார். இவரின் முயற்சியினால்,
திராவிடப் பொதுச்சொற்கள்,
திராவிடப் பொதுப்பழமொழிகள்
ஆகிய இரு
நூல்களைச் சென்னைப்
பல்கலைக்கழகம் வெளியிட்டது.
சொற்பொழிவுகள் :
பல்கலைக்கழகப் பணிகளை சிறப்பகச்
செய்த சேதுப்பிள்ளை,
தமதுசெந்தமிழ்ப் பேச்சால் சென்னை மக்களை ஈர்த்தார்.
இவரின் மேடைப்
பேச்சு ஒவ்வொன்றும்
மேன்மை மிகு
உரைநடைப் படைப்பாக
அமைந்தது. அவரின்
அடுக்குமொழித் தமிழுக்கு உலகமெங்கும் அன்பான வரவேற்பும்,
ஆர்வம் மிகுந்த
பாராட்டும் கிடைத்தன. சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் அவரது
கம்பராமாயணச் சொற்பொழிவு மூன்றாண்டுகள் நடைபெற்றது. அச்சொற்பொழிவின்
தாக்கத்தால் சென்னை மாநகரில் கம்பர் கழகம்
நிறுவப்பட்டது. சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் சிலப்பதிகார
வகுப்பைத் தொடர்ந்து
மூன்றாண்டுகள் நடத்தினார். தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் ஐந்தாண்டுகள்
(வாரம் ஒருநாள்)
திருக்குறள் விளக்கம் செய்தார். கந்தகோட்டத்து மண்டபத்தில்
ஐந்தாண்டுகள் கந்தபுராண விரிவுரை நிகழ்த்தினார்.
படைப்புகள்:
இரா.பி. சேதுப்பிள்ளையின்
உரைநடை நூல்கள்
இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அடங்குவன. பதினான்கு
கட்டுரை நூல்கள்
மூன்று வாழ்க்கை
வரலாற்று நூல்கள்
எழுதியுள்ளார். நான்கு நூல்களை பதிப்பித்தார். சேதுப்பிள்ளையின்
நூல்களுள் பலவும்
அவர் தமிழக
வானொலி நிலையங்களில்
ஆற்றிய இலக்கியப்
பொழிவுகளின் தொகுப்புக்களாகும். இன்னும்
சில நூல்கள்
அவர் தமிழகத்தின்
பல்வேறு இலக்கிய
அமைப்புகளில் ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்புக்களாக
அமைந்தவை. எனவே
அவரது உரைநடை
மேடைப் பேச்சின்
இயல்பினில் அமைந்ததாக உள்ளது. ஆதலின் அவரது
எழுத்தும்பேச்சும் வேறுபாடின்றி அமைந்துள்ளன.
இலக்கிய அமைப்புகளில்
அவர் ஆற்றிய
எழுச்சி மிகுந்த
பொழிவுகளே இனிய
உரைநடையாக வடிவம்
பெற்றன.
இவர் எழுதிய முதல்
கட்டுரை நூல்
"திருவள்ளுவர் நூல் நயம்"
என்பதாகும். படைத்த உரைநடை நூல்களுள் தலை
சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்குவது, "தமிழகம் ஊரும் பேரும்" என்பதாகும்.
இந்நூல் அவரின்
முதிர்ந்த ஆராய்ச்சிப்
பெருநூலாகவும், ஒப்பற்ற ஆராய்ச்சிக் கருவூலமாகவும் திகழ்கிறது.
மேலும்,
·
சிலப்பதிகார
நூல்நயம்
·
தமிழின்பம்
·
தமிழ்நாட்டு
நவமணிகள்
·
தமிழ்வீரம்
·
தமிழ்விருந்து
·
வேலும்வில்லும்
·
வேலின்வெற்றி
·
வழிவழி வள்ளுவர்
·
ஆற்றங்கரையினிலே
·
தமிழ்க்கவிதைக்
களஞ்சியம்
·
செஞ்சொற் கவிக்கோவை
·
பாரதியார்
இன்கவித்திரட்டு
போன்ற நூல்கள் இவரின்
படைப்புகளாகும்.
சிறப்புகள் :
சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும்
நூலுக்கு இந்திய
அரசு அளிக்கும்
சாகித்ய அக்காதமியின்
பரிசு வழங்கப்பட்டது.
இலக்கிய அமைப்புகளும்
அறிஞர் பெருமக்களும்
சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த
வண்ணம் இருந்தனர்.
கவியோகி எனப்
போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி.
சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை”
என்று அழைத்துப்
பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால்
சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.
அடுக்குமொழி, எதுகை, மோனை,
இலக்கியத் தொடர்
மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின்
பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம்
ஆண்டு 'சொல்லின்
செல்வர்' என்னும்
விருது வழங்கியது.
சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின்
நடையைப் போன்றது
என்று சோமலே
பாராட்டுவார். இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச்
சென்னைப் பல்கலைக்
கழகம் 'முனைவர்'
பட்டம் வழங்கிச்
சிறப்பித்தது. மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப்
பாராட்டி "வெள்ளிவிழா" எடுத்தும்,
"இலக்கியப் பேரறிஞர்" என்ற பட்டம் அளித்தும்
சிறப்பித்தது.
உரைநடை நயங்கள்:
இரா.பி. சேதுப்பிள்ளையின்
உரை நடைகளில்
அடுக்குத் தொடர்,
எதுகை, மோனை,
இயைபு, முரண்
ஆகியன அமைந்திருக்கும்.
எடுத்துக்காட்டு - அருமையான தமிழ்ச்
சொல் ஒன்று
இருக்க ஆங்கிலத்தை
எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக்
கடிப்பார் உண்டோ?
“தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த
நாவீறு படைத்தவராக
விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ என்று போற்றப்பட்ட
பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை. அவரது
சொன்மாரி செந்தமிழ்ச்
சொற்கள் நடம்புரிய,
எதுகையும் மோனையும்
பண்ணிசைக்க, சுவைதரும் கவிதை மேற்கோளாக, எடுப்பான
நடையில் நின்று
நிதானித்துப் பொழியும்”அன்பழகன் குறிப்பிடுகின்றார்.
"வாழ்வும்
தாழ்வும் நாடு
நகரங்களுக்கும் உண்டு சீரும் சிறப்பும் உற்று
விளங்கிய சில
நகரங்கள் இக்காலத்தில்
புகைபடிந்த ஓவியம்போல் பொலிவிழந்திருக்கின்றன."
"அறம்
மணக்கும் திருநகரே!
சில காலத்திற்கு
முன்னே பாண்டி
நாட்டில் பருவமழை
பெய்யாது ஒழிந்தது;
பஞ்சம் வந்தது;
பசிநோயும் மிகுந்தது;
நாளுக்குநாள் உணவுப் பொருள்களின் விலை உயர்ந்தது;
நெல்லுடையார் நெஞ்சில் கல்லுடையார் ஆயினர். அப்போது
அன்னக் கொடி
கட்டினார் சீதக்காதி.
'கார்தட்டினால் என்ன? கருப்பு முற்றினால் என்ன?
என் களஞ்சிய
நெல்லை அல்லா
தந்த நெல்லை
- எல்லார்க்கும் தருவேன்’ என்று மார்தட்டினார் - இதுவன்றோ
அறம்?"
"தென்னாட்டிலே
தென்றல் என்றொரு
பொருள் உண்டு;
தனியே அதற்கொரு
சுகம் உண்டு.
வசந்த காலத்தில்
தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை
நன்றாக அறிந்தவர்
தமிழர்; வடக்கேயிருந்துவரும்
குளிர்காற்றை " வாடை" என்றார்கள்
; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள்
. வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற
சொல்லிலே மென்மையுண்டு
. தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து
திளைப்பர்."
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
· ஆற்றங்கரையினிலே (நூல்)
· கடற்கரையினிலே (நூல்)
· கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் (நூல்)
· தமிழ் விருந்து (நூல்)
· தமிழக ஊரும் பேரும் (நூல்)
· தமிழர் வீரம் (நூல்)
· தமிழின்பம் (நூல்)
· மேடைப் பேச்சு (நூல்)
· வேலின் வெற்றி (நூல்)
மறைவு :
தமிழ் வளர்ச்சிக்காகத் தமது
இறுதிக்காலம் வரை பாடுபட்ட சொல்லின் செல்வர்
ரா.பி.
சேதுப்பிள்ளை 1961 ஏப்ரல் 25ல்
65 -ஆம் வயதில்
மறைந்தார்.
0 comments:
Post a Comment