Friday, November 14, 2014

·         உவமையால் விளக்கப்படும் பொருள்:
·         கறையான் புற்றெடுக்கக் கருநாகம் குடி புகுந்தது போல் = அத்துமீறல்
·         அச்சில் வார்த்தாற் போல் = ஒரே சீராக
·         அவளை நினைத்து உரலை இடித்தாற் போல் = கவனம்
·         அரை கிணறு தாண்டியவன் போல் = ஆபத்து
·         இடி விழுந்த மரம் போல் = வேதனை
·         உமையும், சிவனும் போல் = நெருக்கம், நட்பு
·         ஊமை கண்ட கனவு போல் = தவிப்பு, கூற இயலாமை
·         எட்டாப்பழம் புளித்தது போல் = ஏமாற்றம்
·         ஏழை பெற்ற செல்வம் போல் = மகிழ்ச்சி
·         கயிரற்ற பட்டம் போல் = தவித்தல், வேதனை
·         கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் = துன்பம், வேதனை
·         தொட்டனை தூறும் மணற்கேணி = அறிவு
·         உடுக்கை இழந்தவன் கைபோல் = நட்பு, உதவுதல்
·         நீரின்றி அமையாது உலகெனின் = ஒழுக்கம் இராது, ஒழுக்கு
·         தோன்றின் புகழோடு தோன்றுக = தோன்றாமை நன்று
·         வரையா மரபின் மாரி போல் = கொடுக்கும் தன்மை
·         பகல்வெல்லும் கூகையைக் காக்கைப் போல் = எளிதில் வெல்லுதல்
·         ஒருமையுள் ஆமை போல் = அடக்கம்
·         ஊருணி நீர் நிறைதல் = செல்வம்
·         மருந்தாகி தப்பா மரம் = தீர்த்து வைத்தல்
·         செல்வற்கே செல்வம் தகைத்து = அடக்கம்
·         பாராங்கல் மீது விழும் மழைநீர் போல் = சிதறிப்போதல்
·         மடவார் மனம் போல் = மறைந்தனர்
·         அகழ்வாரை தாங்கும் நிலம் போல் = பொறுமை, பொறுத்தல்
·         அத்தி பூத்தாற் போல் = அறிய செல்வம்
·         அனலில் இட்ட மெழுகு போல் = வருத்தம், துன்பம்
·         அலை ஓய்ந்த கடல் போல் = அமைதி, அடக்கம்
·         அழகுக்கு அழகு செய்வது போல் = மேன்மை
·         அடியற்ற மரம் போல் = துன்பம், விழுதல், சோகம்
·         இஞ்சி தின்ற குரங்கு போல் = துன்பம், வேதனை
·         இடி ஓசை கேட்ட நாகம் போல் = அச்சம், மருட்சி, துன்பம்
·         இழவு காத்த கிளி போல் = ஏமாற்றம், நினைத்தது கை கூடாமை
·         உயிரும் உடம்பும் போல் = ஒற்றுமை, நெருக்கம், நட்பு
·         உள்ளங்கை நெல்லிக்கனி போல் = தெளிவு
·         ஊசியும் நூலும் போல் = நெருக்கம், உறவு
·         எலியும் பூனையும் போல் = பகை, விரோதம்
·         எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல் = வேதனையைத் தூண்டுதல்
·         ஒருநாள் கூத்திற்கு மீசை சிரைத்தாற் போல் = வெகுளித்தனம், அறியாமை
·         கல்லுப்பிள்ளையார் போல் = உறுதி, திடம்
·         சுதந்திர பறவை போல் = மகிழ்ச்சி, ஆனந்தம்
·         கடல் மடை திறந்தாற் போல் = விரைவு, வேகம்
·         கடலில் கரைத்த பெருங்காயம் போல் = பயனற்றது, பயனின்மை
·         கடன் பட்டான் நெஞ்சம் போல் = மனவருத்தம், கலக்கம்
·         காட்டாற்று ஊர் போல் = அழிவு, நாசம்
·         கிணற்றுத் தவளை போல் = அறியாமை, அறிவின்மை
·         கிணறு வேட்ட பூதம் பிறந்தது போல் = அதிர்ச்சி, எதிர்பாரா விளைவு
·         குன்று முட்டிய குருவி போல் = வேதனை, துன்பம், சக்திக்கு மீறிய செயல்
·         குடடி போட்ட பூனை போல் = பதட்டம், அழிவு, துன்பம்
·         சாயம் போன சேலை போல் = பயனின்மை
·         சூரியனை கண்ட பணி போல் = மறைவு, ஓட்டம்

0 comments:

Post a Comment