Friday, November 28, 2014


திருக்குறளின் விளக்கம்:
  • ஆசிரியர்       = திருவள்ளுவர்
  • பாவகை        = குறள் வெண்பா
பெயர்க்காரணம்:
  • திரு + குறள் = திருக்குறள்
  • குறுகிய அடிகளை கொண்டதால் இப்பெயர் பெற்றது.
  • திருக்குறள் என்பதுஅடையடுத்த கருவியாகு பெயர்
திருக்குறளின் சிறப்பு கூறுபவை:
திருக்குறளின் முன்னோடி எனப்படுவது 
புறநானூறு
திருக்குறளின் விளக்கம் எனப்படுவது
நாலடியார்(சமண முனிவர்கள்)
திருக்குறளின் பெருமையை கூறுவது
திருவள்ளுவ மாலை
திருக்குறளின் சாரம் எனப்படுவது
நீதிநெறிவிளக்கம்(குமரகுருபரர்)
திருக்குறளின் ஒழிபு எனப்படுவது
திருவருட்பயன்(உமாபதி சிவம்)
திருக்குறளின் வேறு பெயர்கள்:
  • திருவள்ளுவம்
  • தமிழ் மறை
  • பொதுமறை
  • முப்பால்
  • பொய்யாமொழி
  • தெய்வநூல்
  • வாயுறைவாழ்த்து
  • உத்தரவேதம்
  • திருவள்ளுவப் பயன்(நச்சினார்க்கினியர்)
  • தமிழ் மாதின் இனிய உயர் நிலை
  • அறஇலக்கியம்
  • அறிவியல் இலக்கியம்
  • குறிக்கோள் இலக்கியம்
  • நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:
  • நாயனார்
  • தேவர்(நச்சினார்க்கினியர்)
  • முதற்பாவலர்
  • தெய்வப்புலவர்(இளம்பூரனார்)
  • நான்முகன்
  • மாதானுபாங்கி
  • செந்நாப்போதார்
  • பெருநாவலர்
  • பொய்யில் புலவன்
திருவள்ளுவரின் காலம்:
  • கி.மு.1          = வி.ஆர்.ஆர்.தீட்சிதர்
  • கி.மு.31         = மறைமலை அடிகள்(இதனை நாம் பின்பற்றுகிறோம்)
  • கி.மு.1-3        = இராசமாணிக்கனார்
நூல் பகுப்பு முறை:
  • பால்                    = 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
  • அதிகாரம்              = 133
  • மொதப்பாடல்கள்       = 1330
  • இயல்கள்               = 9
  • அறத்துப்பால் 38 அதிகாரங்களையும் 4 இயல்களையும்  உடையது.
  • பாயிரவியல்    = 4 அதிகாரங்கள்
  • இல்லறவியல் = 20 அதிகாரங்கள்
  • துறவறவியல் = 13 அதிகாரங்கள்
  • ஊழியல்        = 1 அதிகாரங்கள்
  • பொருட்பாலில் 70 அதிகாரங்களையும் 3 இயல்களையும்  உள்ளது.
  • அரசியல்       = 25 அதிகாரங்கள்
  • அங்கவியல்    = 32 அதிகாரங்கள்
  • குடியியல்      = 13 அதிகாரங்கள்
  • இன்பத்துப்பால் 25 அதிகாரங்களையும் 2 இயல்களையும்  உடையது.
  • களவியல்      = 7 அதிகாரங்கள்
  • கற்பியல்       = 18 அதிகாரங்கள்
திருக்குறளின் உரைகள்:
  • திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்
தருமர் மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிதி, பரிமே லழகர், - திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், கலிங்கர் வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்
  • திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் முந்தியவர் = தருமர்
  • திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர் = பரிமேழலகர்
  • மு., நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்.
பொதுவான குறிப்புகள்:
  • திருக்குறள்கரத்தில் தொடங்கிகரத்தில் முடிகிறது.
  • சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா போன்ற பல நூல்கள் திருக்குறளின் பெருமையை கூறுகின்றன.
  • திருக்குறளை முதலில் பதிப்பித்தவர் = மலயத்துவான் மகன் ஞானப்பிரகாசம் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.
  • தை 2ம் நாள் = திருவள்ளுவர் தினம்
  • தமிழிற்குகதிஎனப்படுவது = கம்பராமாயணம், திதிருக்குறள்
  • திருக்குறளில் 12000 சொற்கள் உள்ளன. இவற்றில் வட சொற்கள் ஐம்பதிற்கும் குறைவு. ஏறத்தாழ அவை 0.4% ஆகும்.
திருக்குறள் மொழிப்பெயர்ப்பு;
  • இலத்தின் = வீரமாமுனிவர்
  • ஜெர்மன் = கிரால்
  • ஆங்கிலம் = ஜி.யு.போப், .வே.சு.ஐயர், இராஜாஜி
  • பிரெஞ்ச் = ஏரியல்
  • வடமொழி =அப்பாதீட்சிதர்
  • இந்தி = பி.டி.ஜெயின்
  • தெலுங்கு = வைத்தியநாத பிள்ளை
சிறப்பு:
  • பாரதியார் வள்ளுவரை பாராட்டுதல்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகல் கொண்ட தமிழ்நாடு
  • பாரதியார் மேலும், “கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சி இல்லைஎன்கிறார்.
  • மனோன்மணியம் சுந்தரனார் வள்ளுவரை புகழ்தல்
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி
சுத்தானந்தபாரதி கூறுவது
எம்மதம் எவ்வினமும் எந்நாளும்
சம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம்
திரு.வி. கூற்று:
  • திருக்குறள் ஒரு வகுப்பாற்கோ, ஒரு மதத்தாற்கோ, ஒரு நிறத்தாற்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டாற்கோ உரியதன்று; அது மன்பதைக்கு உலகுக்குப் பொது.
கி..பெ.விஸ்வநாதம் கூற்று:
  • திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஓர் நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி உலகிற்கு தெரிந்திருக்காது.
முக்கிய அடிகள்:
  • அறத்தான் வருவதே இன்பம்
  • மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்
  • திருவேறு தெள்ளியராதலும் வேறு
  • பெண்ணிற் பெருந்தக்க யாவுள்
  • ஊழிற் பெருவழி யாவுள
  • முயற்சி திருவினை யாக்கும்
  • இடுக்கண் வருங்கால் நகுக
  • கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
  • அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
  • ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்

10 comments:

  1. Thirukural ethini mozhigalil mozhi peyarka patuladu?

    ReplyDelete
    Replies
    1. 107 ஆய்வுக்கு தமிழ்நாடு பள்ளி பாட புத்தகம் (பழையது)6th book

      Delete
    2. திருக்குறளில் எத்தனை அடிகள் உள்ளது

      Delete
  2. Ethanai mozhikalil thirukkural mozhi peyerpu seiyappattu ullathu

    ReplyDelete
  3. சிறந்த

    ReplyDelete